×

சிலம்ப உலக சாதனை நிகழ்வில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

 

கோவை, மே 1: கோவையில் நடைபெற்ற சிலம்ப உலக சாதனை நிகழ்வில் கோவை பொன்னேகவுண்டன்புதூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 18 பேர் கலந்துகொண்டனர். இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயகலைமதி கூறியதாவது: கோவை தென்னம்பாளையத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 20 நிமிடங்கள், 24 வினாடிகள் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.

இந்த உலக சாதனை நிகழ்வில் பொன்னேகவுண்டன்புதூர் அரசு பள்ளி சேர்ந்த 18 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த சாதனையை அங்கிரித்த வோர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், பதக்கங்களும் அளித்துள்ளது. சிலம்ப பயிற்சியாளர் பால் பாண்டி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்துள்ளார். இது போன்ற சாதனைகள் மற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சிலம்ப உலக சாதனை நிகழ்வில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Silamba world record ,Coimbatore ,Ponnekauntanputhur Government School ,headmistress ,Jayakalamathi ,Thennampalayam ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...